News March 1, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் காலை 10 மணி வரை நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி & விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு & மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 20, 2026
சட்டம் ஒழுங்கில் ஏன் மெத்தனம்?

விளாத்திகுளம் மாணவி ரேப் மற்றும் கொலை வழக்கில், சந்தேக நபரை கைது செய்யவே 1 வாரத்துக்கு மேல் ஆகியுள்ளது. இந்த மாணவியின் மரணமாகட்டும், கஸ்டடியில் உயிரிழந்த ஆகாஷ் வழக்காகட்டும், ஏன் அஜித்குமார் மரண வழக்கில் கூட பாதிக்கப்பட்டவர்களும், மற்றவர்களும் போராடிய பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சாமானிய மக்கள் என்றால் மெத்தனமாக தான் அதிகாரிகள் செயல்படுவார்களா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News March 20, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.19) இரவு ரோந்து பணிகளில் செந்தில்குமார் ஈடுபடுகின்றனர். துணை ஆணையர் இளவரசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்
News March 20, 2026
அமித்ஷாவின் இல்லத்தில் EPS

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக அமித்ஷாவை அவரது இல்லத்தில் EPS சந்தித்துள்ளார். இச்சந்திப்பில், NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, NDA கூட்டணியில் பாஜகவுக்கு 27 சீட்களை ஒதுக்க EPS முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது.


