News March 1, 2025
ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்: இன்றே கடைசி

ரயில்வேயில் 32,438 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.1) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயதாக 18ம், அதிகபட்ச வயதாக 36ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலையில் சேர விரும்புவோர், ரயில்வே ஆள்தேர்வு <
Similar News
News March 1, 2025
ஆகஸ்டில் வருகிறான் ‘பைசன்’

மாரிசெல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் பைசன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில், துருவ் உடன் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
News March 1, 2025
இந்தியை தேசிய மொழி என்ற அமைச்சர்

இந்தி மொழியை தேசிய மொழி என்று மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் இந்தி திணிப்பு தொடர்பான பிரச்னைகள் வெடித்துக் கொண்டிருக்கும் வேளையில், ”தேசிய மொழியான இந்தி, முழு நாட்டையும் ஒற்றுமையின் நூலில் இணைக்கும்” என்று அவர் பேசியிருக்கிறார். இதுகுறித்த உங்களது கருத்து என்ன?
News March 1, 2025
Shadow Budget: ரேஷன் கடைகளில் நாட்டு சர்க்கரை

தமிழக ரேஷன் கடைகளில் நாட்டு சர்க்கரை விற்கப்படும் என்பன உள்ளிட்ட 80 தலைப்புகளின் கீழ், வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அதில், வேளாண்துறைக்கு பட்ஜெட்டில் ₹65,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவிரியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்குவது, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள்களாக உயர்த்துவது உள்ளிட்ட திட்டங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.