News March 1, 2025

காலை எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்ப்பது ஏன்?

image

அதிகாலை எழுந்தவுடன் உள்ளங்கைகளில் கண் விழிப்பது நல்ல விஷயங்களைக் கொண்டுவரும் என்று இந்து மதத்தில் நம்பப்படுகிறது. அதற்கு காரணம், கல்வியின் அதிபதி சரஸ்வதி, செல்வத்தின் அதிபதி லக்ஷ்மி & காத்தலின் கடவுள் விஷ்ணு ஆகியோர் உள்ளங்கைகளில் வாசம் செய்கின்றனர் என்ற நம்பிக்கைதான். அவர்களை வணங்கி ஒவ்வொரு நாளையும் தொடங்குவது அந்த நாளை இனிமையாக்குகிறது. நீங்களும் டிரை பண்ணி பாருங்க.

Similar News

News March 1, 2025

மகனை துடிதுடிக்க கொன்ற தாய்.. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

image

பூந்தமல்லியில் 6 வயது மகனை கொடூரமாக கொன்று கால்வாயில் வீசிய வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018இல் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீனாட்சி என்ற பெண் தனது மகன் ஜெயகாந்தை தலையணையால் அழுத்தி, கொலை செய்து உடலை எரித்து வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் வீசினார். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மீனாட்சி போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுதார். இப்படியும் ஒரு தாயா?

News March 1, 2025

நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ…

image

நீண்ட ஆரோக்கியமான உடல்நிலைக்கு இந்த சிம்பிளான 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க: சிக்கன், மட்டனுக்கு பதிலாக மீனை அதிகமாக சாப்பிடுங்கள். எப்போதாவது உண்ணாவிரதம் இருங்கள். உடலுக்கான பெஸ்ட் டையட்டை டாக்டரிடம் கேட்டு அறியுங்கள் * உடற்பயிற்சி, ஏரோபிக், யோகாவை வழக்கமாக்கி கொள்ளுங்கள் *பல நோய்களுக்கு தனிமை ஒரு முக்கிய காரணியாகிறது. எனவே நண்பர்கள், குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுங்கள். SHARE IT.

News March 1, 2025

அழிவின் விளிம்பில் இருந்து 64% வளர்ச்சி அடைந்த சிங்கம்!

image

அழிவின் விளிம்பில் இருந்த ஆசிய சிங்கங்களை காப்பாற்ற 1973ல் கிர் லயன் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், 2010ல் 411 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2020ல் 674ஐ எட்டியது. அதாவது, 64% எண்ணிக்கை உயர்வு. இத்திட்டம், குஜராத்தின் சாசன் கிர் புலிகள் காப்பகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 2023- 2024 நிதியாண்டில் மட்டும் இந்திய அரசாங்கம் ₹155.5 கோடியை ஒதுக்கியது.

error: Content is protected !!