News March 30, 2024
திருவள்ளூர்: 4.38 லட்சம் லிட்டர் ஆயில் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் விச்சூர் கிராமம், S.P.நகர் பகுதியில் அரசு மானியத்துடன் வழங்கக்கூடிய, லாரி இன்ஜின்களுக்கு பயன்படுத்தும் கருப்பு ஆயிலை பதுக்கி கள்ள சந்தையில் விற்பதாக குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு நேற்று(மார்ச் 29) தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் சுமார் 4.38 லட்சம் லிட்டர் ஆயிலை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
திருவள்ளூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <
News February 8, 2026
திருவள்ளூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

திருவள்ளூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News February 8, 2026
திருவள்ளூர் அருகே நூதன திருட்டு… உஷார் மக்களே

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா. இவரிடம் மர்ம நபர்கள் இரண்டு பேர் நாங்கள் ஆந்திர மாநில டாக்டர்கள் மனநிலை குன்றியவர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறித்து சென்றனர். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். *எனவே உஷாரா இருங்க மக்களே*


