News March 1, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச்.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹5.50 உயர்ந்துள்ளது. இதனால், ₹1,965க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ₹818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹7 குறைக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் மீண்டும் உயர்வை கண்டுள்ளது. GAS விலை உயர்வு குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News March 1, 2025
இம்மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை

பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை, 2, 4வது சனிக்கிழமை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு இம்மாதம் மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இதனால், வங்கிகளுக்கு நேரடியாக சென்று அத்தியாவசிய வங்கி சேவைகள் மற்றும் பரிவர்த்தனை மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த லீவு நாட்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். முழு விவரங்களை அறிய <
News March 1, 2025
பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடர்: பிரக்ஞானந்தா வெற்றி

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 3வது சுற்றில் பிரக்ஞானந்தா வென்றார். இப்போட்டியில் பிரக்ஞானந்தா, செக் குடியரசு வீரர் டாய் வென்னைச் சந்தித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். முதல் இரு ஆட்டங்களில் அவர் டிரா செய்திருந்தார். 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.