News March 1, 2025

பழிவாங்கும் முயற்சி: சீமான்

image

அரசியல் ரீதியாக தன்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் வழக்கு மூலம் முடக்கி விடலாம் என நினைப்பதாக சீமான் விமர்சித்துள்ளார். காவல்துறையினர் விசாரணைக்கு பிறகு பேசிய அவர், கடந்த முறை கேட்ட கேள்விகளையே தன்னிடம் காவல்துறையினர் மீண்டும் கேட்டனர் என்றார். வழக்கு தொடர்பாக தேவைப்பட்டால் மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 1, 2025

LinkedInல் வேலைக்கு அப்ளை பண்றீங்களா.. கவனமா இருங்க!

image

சைபர் கிரிமினல்கள் வேலை தேடுபவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடுகிறார்கள். LinkedInல் போலி அறிவிப்புகளை வெளியிட்டு, அதில் விண்ணப்பிப்பவர்களிடம் ‘Grass Call’ என்ற ஒரு ஆப்பை Install செய்யும் படி வலியுறுத்துகிறார்கள். இதை டவுன்லோட் செய்தவுடன், யூசரின் தொலைபேசி, கணினி டேட்டா, வங்கி விவரங்கள் போன்ற தகவல்களைத் எளிதில் திருடி விடுகிறார்கள். இனி Apply பண்ணும் போது உஷாரா இருங்க!

News March 1, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் காலை 10 மணி வரை நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி & விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு & மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

News March 1, 2025

ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்: இன்றே கடைசி

image

ரயில்வேயில் 32,438 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.1) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயதாக 18ம், அதிகபட்ச வயதாக 36ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலையில் சேர விரும்புவோர், ரயில்வே ஆள்தேர்வு <>இணையதளத்தில்<<>> உடனே விண்ணப்பிக்கவும். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்க.

error: Content is protected !!