News March 1, 2025
சீமானிடம் விசாரணை நிறைவு

நடிகை பாலியல் புகார் தொடர்பாக சீமானிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. இரவு 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தொடங்கிய விசாரணை இரவு 11.15 மணிக்கு நிறைவடைந்தது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், காவல்துறையினர் அப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் சீமான் பேட்டியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 1, 2025
₹1000 கோடி ஹிட் கொடுத்த டைரக்டருடன் இணையும் SK?

தொடர்ந்து SK, முன்னணி டைரக்டர்களுடன் இணைய முயன்று வருகிறார். பராசக்தி, மதராஸி படங்களில் நடித்து வரும் அவர், அடுத்ததாக மெகா ப்ராஜெக்ட் ஒன்றில் கமிட் ஆகும் முனைப்பில் இருக்கிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜை மீட் பண்ணி, ஒரு படம் குறித்து SK பேசியதாக கூறப்படும் நிலையில், அவர் அடுத்து அட்லீயையும் மீட் பண்ணி படம் குறித்த டிஸ்கஸ் செய்ததாக கூறப்படுகிறது. அட்லீ – SK காம்போ எப்படி இருக்கும்?
News March 1, 2025
நாளை தொடங்குகிறது ரம்ஜான் நோன்பு

இந்த ஆண்டுக்கான ரம்ஜான் முதல் பிறை நாளை (02.03.2025) நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். நேற்றைய தினமான வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பிறை தென்படவில்லை. ஆகையால், இஸ்லாமிய பெருமக்கள் நாளை முதல் 30 நாள்கள் நோன்பிருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடவுள்ளனர். ஷரியத் முறைப்படி இந்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹாஜி தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
காலை எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்ப்பது ஏன்?

அதிகாலை எழுந்தவுடன் உள்ளங்கைகளில் கண் விழிப்பது நல்ல விஷயங்களைக் கொண்டுவரும் என்று இந்து மதத்தில் நம்பப்படுகிறது. அதற்கு காரணம், கல்வியின் அதிபதி சரஸ்வதி, செல்வத்தின் அதிபதி லக்ஷ்மி & காத்தலின் கடவுள் விஷ்ணு ஆகியோர் உள்ளங்கைகளில் வாசம் செய்கின்றனர் என்ற நம்பிக்கைதான். அவர்களை வணங்கி ஒவ்வொரு நாளையும் தொடங்குவது அந்த நாளை இனிமையாக்குகிறது. நீங்களும் டிரை பண்ணி பாருங்க.