News February 28, 2025

போலீஸ் நிலையத்திற்குள் சீமான்.. வெளியே தொண்டர்கள்

image

விஜயலட்சுமியின் புகார் தொடர்பான விசாரணைக்காக சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜராகியுள்ளார். அவருடன் வழக்கறிஞர்களும் வந்துள்ளனர். சீமானின் கயல்விழி காவல்நிலையம் வரவில்லை. அதேநேரத்தில், நாதக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தைச் சுற்றிலும் குவிந்துள்ளனர். வீரப்பனின் மகள் வித்யாராணி, சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரை உள்ளே போலீசார் அனுமதிக்கவில்லை.

Similar News

News March 1, 2025

இம்மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை

image

பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை, 2, 4வது சனிக்கிழமை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு இம்மாதம் மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இதனால், வங்கிகளுக்கு நேரடியாக சென்று அத்தியாவசிய வங்கி சேவைகள் மற்றும் பரிவர்த்தனை மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த லீவு நாட்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். முழு விவரங்களை அறிய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.

News March 1, 2025

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடர்: பிரக்ஞானந்தா வெற்றி

image

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 3வது சுற்றில் பிரக்ஞானந்தா வென்றார். இப்போட்டியில் பிரக்ஞானந்தா, செக் குடியரசு வீரர் டாய் வென்னைச் சந்தித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். முதல் இரு ஆட்டங்களில் அவர் டிரா செய்திருந்தார். 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

News March 1, 2025

இவர்கள் ஆட்சிக்கு வருவது பேராபத்து: ஜவாஹிருல்லா

image

அரசியலையும் சிலர் சினிமாவை போல் நினைப்பதாக நடிகர் விஜயை மறைமுகமாக ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். பாசிசமா, பாயாசமா என்று சிலர் சிறுபிள்ளைத்தனமாக பேசுவதாகவும், அவர்கள் ஆட்சிக்கு வருவது தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்றும் சாடியுள்ளார். சினிமாவை போல் அரசியல் இருக்காது என்றும், பேச்சை கேட்பவர்கள் எல்லாம் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!