News February 28, 2025

BREAKING: போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜர்

image

விஜயலட்சுமியின் பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்காக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராகியுள்ளார். ஏற்கெனவே விசாரணைக்கு ஆஜராகும்படி வீட்டில் சம்மனை போலீசார் ஓட்டினர். இந்நிலையில் இன்று இரவு சுமார் 9.30 மணிக்கு நேரில் ஆஜராகும்படி அவரை கோரியிருந்தனர். அதையேற்று, சீமான் இரவு 10 மணிக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் விஜயலட்சுமி புகார் குறித்து விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.

Similar News

News March 1, 2025

இவர்கள் ஆட்சிக்கு வருவது பேராபத்து: ஜவாஹிருல்லா

image

அரசியலையும் சிலர் சினிமாவை போல் நினைப்பதாக நடிகர் விஜயை மறைமுகமாக ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். பாசிசமா, பாயாசமா என்று சிலர் சிறுபிள்ளைத்தனமாக பேசுவதாகவும், அவர்கள் ஆட்சிக்கு வருவது தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்றும் சாடியுள்ளார். சினிமாவை போல் அரசியல் இருக்காது என்றும், பேச்சை கேட்பவர்கள் எல்லாம் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 1, 2025

பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி

image

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, சீனாவின் ஜியா ஜுவான்-மெங் யங் ஜோடி மோதியது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

News March 1, 2025

முதல்வருக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து

image

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞர் தன்னை அரசியல் கட்சி தலைவராக்கியதாகவும், ஆனால் ஸ்டாலின் வழக்குப்போட்டு தன்னை நிச்சயம் முதல்வராக்கி விடுவார் என்றார். அரசியல் ரீதியாக எத்தனை இடையூறுகளை ஏற்படுத்தினாலும், அதை உடைத்தெறிவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!