News February 28, 2025

ரூ.90 லட்சம் கோடி மாயம்

image

இந்திய பங்குச்சந்தைகளுக்கு இது போதாத காலம் போல. தொடர் சரிவை கண்டுவந்த நிலையில் இன்று NIFTY 400+ புள்ளிகளையும், BSE 1400 புள்ளிகளையும் இழந்தன. தேசிய பங்குச்சந்தையின் NIFTY, கடந்த செப்-ல் 26,277.35 புள்ளிகள் என்ற உச்சநிலையை அடைந்தது. அதிலிருந்து இன்றுவரை 15% சரிந்துள்ளது. SEP-லிருந்து இன்றுவரை நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.90 லட்சம் கோடி இழக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News March 1, 2025

போர் விமானங்களின் தேவை அதிகரிப்பு: ஏ.பி. சிங்

image

இந்தியா ஆண்டுதோறும் 35 முதல் 40 போர் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் தெரிவித்தார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் 24 தேஜாஸ் விமானங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்திய விமானப்படை (IAF) தனது பழைய விமானங்களை மாற்றுவதற்கு ஆண்டுக்கு குறைந்தது 35 முதல் 40 போர் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 1, 2025

ஊழலின் மொத்த உருவம் கெஜ்ரிவால்: ரேகா குப்தா

image

கஜானாவில் இருந்து ஒரு பைசா கூட வீணாகப் போக விடமாட்டேன் என டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறியுள்ளார். சிஏஜி அறிக்கை அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் ஊழலையும், மக்களின் ஆரோக்கியத்தோடு அவர்கள் விளையாடியதை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். ஆம் ஆத்மி டில்லியில் இருந்து வரி வசூலித்து, மற்ற மாநிலங்களில் தேர்தல்களுக்குப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News March 1, 2025

துபாய் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிட்சிபாஸ்

image

துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சிட்சிபாஸ் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

error: Content is protected !!