News February 28, 2025
ரூ.90 லட்சம் கோடி மாயம்

இந்திய பங்குச்சந்தைகளுக்கு இது போதாத காலம் போல. தொடர் சரிவை கண்டுவந்த நிலையில் இன்று NIFTY 400+ புள்ளிகளையும், BSE 1400 புள்ளிகளையும் இழந்தன. தேசிய பங்குச்சந்தையின் NIFTY, கடந்த செப்-ல் 26,277.35 புள்ளிகள் என்ற உச்சநிலையை அடைந்தது. அதிலிருந்து இன்றுவரை 15% சரிந்துள்ளது. SEP-லிருந்து இன்றுவரை நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.90 லட்சம் கோடி இழக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News March 15, 2026
தேர்தல் விதிமீறல்.. cVIGIL செயலியில் புகார் கொடுங்க!

சிவிஜில் (cVIGIL) என்பது தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகாரளிப்பதற்கு ECI உருவாக்கிய செயலி ஆகும். இதில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வது, பரிசுப் பொருள்கள் வழங்குவது, அனுமதித்த நேரத்தை மீறி பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் புகாரளிக்கலாம். எந்தவொரு விதிமீறலாக இருந்தாலும், அதுபற்றிய போட்டோ, வீடியோ, ஆடியோவை ஆதாரமாக பதிவேற்றி புகார் தெரிவிக்கலாம்.
News March 15, 2026
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைவிரல் ரேகையை மார்ச் 25-க்குள் பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட வாரியாக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால், இதுவரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள், அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று உடனே பணியை முடியுங்கள். இல்லையெனில், ரேஷன் அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கப்படலாம். ரேஷன் பொருள்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். SHARE IT
News March 15, 2026
திரையில் ஹீரோ, நிஜத்தில் ஜீரோ: ஜவாஹிருல்லா

அதிமுக கூட்டணியில் தவெக இணையவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், விஜய்யை ஜவாஹிருல்லா மறைமுகமாக விமர்சித்துள்ளார். விஜய்யை திரையில் ஹீரோ, நிஜத்தில் ஜீரோ என்று சாடிய அவர், LPG விவகாரத்தில் விஜய் ஒரு அறிக்கையாவது வெளியிட்டு இருக்கிறாரா என கேள்வி எழுப்பினார். மேலும், அடிமைகளிடம் இவரும் அடிமையாகிவிட்டார் என்றும் எஜமானை (பாஜக தலைமை) பார்க்க டெல்லி சென்றுள்ளார் எனவும் சாடியுள்ளார்.


