News February 28, 2025
ரூ.1,000 உதவித் தொகைக்கான தேர்வு: புது அறிவிப்பு

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் 9 – 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை செலுத்தப்படும். இந்தத் தேர்வு பிப்.9இல் நடத்தப்பட்டது. இதற்கான விடைக்குறிப்பு www.dge.tn.gov.inஇல் வெளியிடப்பட்ட நிலையில், ஆட்சேபனை இருந்தால், dgedsection@gmail.comஇல் மார்ச் 5க்குள் தெரிவிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.
Similar News
News March 23, 2026
புதுச்சேரியில் காங்கிரசுக்கு 16.. திமுகவுக்கு 12..!

புதுச்சேரியில் கடும் இழுபறிக்கு பிறகு காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி காங்.,-16, திமுக-12, விசிக-1, CPI-1-ல் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 30 தொகுதிகளுக்கும் காங்கிரஸ், திமுகவினர் தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், தற்போது தொகுதிப் பங்கீட்டின் அடிப்படையில் வேட்புமனுக்களை திரும்பப் பெற கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 23, 2026
பயந்துவிட்டாரா டிரம்ப்?

ஈரானை மிரட்டிக் கொண்டிருந்த டிரம்ப் திடீரென 5 நாள் போர்நிறுத்தம் அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து எல்லா நாடுகளையும் நெருக்குகிறது. மேலும், இந்த போருக்கு ₹2 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டும் அமெரிக்காவால் வெற்றியை நெருங்க முடியவில்லை. இதற்கு மேல் இழப்புகளை தாங்க முடியாது என்றே டிரம்ப் இம்முடிவை எடுத்திருப்பார் என நிபுணர்கள் கூறுகின்றனர்
News March 23, 2026
பள்ளி மாணவர்களுக்கு அரசின் மகிழ்ச்சியான செய்தி

மாணவர்களின் மனநலத்தை பாதுகாக்கவும், விபரீத எண்ணங்களை குறைக்கவும் பள்ளிகளுக்கு அரசின் புதிய உத்தரவு பறந்துள்ளது. அதன்படி, 14416, 14417, 104, 1098, 181 போன்ற உதவி எண்களை பயன்படுத்தி மனநல ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பெற்றோரின் பங்களிப்போடு இந்த முயற்சி செயல்படுத்தப்பட்டால் மாணவர்களின் மனநல பாதுகாப்பு மேம்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT


