News February 28, 2025
சம்மனை கதவில் ஒட்டியது ஏன்? சீமான் கேள்வி

சம்மனை கதவில் போலீசார் ஒட்டியது ஏன் என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். சேலத்தில் இருந்து சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது, சம்மன் அளிக்க வந்த போலீசார், தாம் வீட்டில் இல்லையென்றால், தனது மனைவியிடம் அதை அளித்து சென்று இருக்கலாம் என்று கூறினார். தனது மனைவியிடம் சம்மனை அளிக்காமல் கதவில் ஒட்டி அவமானப்படுத்தி உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
Similar News
News March 18, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 18, பங்குனி 4 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News March 18, 2026
பழிவாங்காமல் விடமாட்டேன்: மொஜ்தபா கமேனி

அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி மறுத்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக சில நாடுகள் பேசியதாக ஈரான் அதிகாரி ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், இது சமாதானத்திற்கான நேரம் அல்ல. அமெரிக்காவும் இஸ்ரேலும் மண்டியிட்டு, தோல்வியை ஏற்றுக்கொண்டு, இழப்பீடு வழங்க வேண்டும் என மொஜ்தபா தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
News March 18, 2026
காலையில் டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்

காலையில் டீ, காபிக்கு பதிலாக மோரில் இஞ்சி, கருமிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து அருந்தலாம். ஒரு கிளாஸ் மோர் அருந்துவது சூட்டை தணித்து உடலை வறண்ட நிலையில் இருந்து பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரில் மோர் தயாரிப்பது நல்லதாம். மோர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


