News February 28, 2025
திருச்சியில் சிக்கிய 8 கிலோ புகையிலை பொருட்கள்

திருச்சி, பொன்மலைபட்டி காவல் நிலைய போலீசார் நேற்று (பிப்.27) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த புவனேஷ், பிரபாகரனை சோதனை செய்தபோது, ரூ. 27,700 மதிப்புள்ள 8.682 கிலோ எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியது தெரிய வந்தது. உடனே போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து, புகையிலை பொருட்கள், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Similar News
News April 7, 2026
BREAKING: திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வேட்புமனு ஏற்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் வயது, வழக்கு உள்ளிட்டவற்றில் குளறுபடி இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அந்த தவறுகளை திருத்தம் செய்து அவர் மேலும் 2 பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவரின் வேட்புமனு திருச்சி கிழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 7, 2026
திருச்சி: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

திருச்சி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு க்ளிக் செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!
News April 7, 2026
திருச்சி மாவட்டத்தில் ரூ.1.32 கோடி பறிமுதல்

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (ஏப்.6) மாலை வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,32,30,285 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.64,62,835 விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.


