News February 28, 2025
ஜனநாயகன் VS பராசக்தி: சினிமாவிலும் அரசியல்?

‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ படங்கள் 2026 பொங்கலில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கடைசி படம் பொங்கலுக்கு வெளியானால், அது அடுத்து நடைபெறும் தேர்தலுக்கு பயன்படும் என விஜய் தரப்பு நம்புகிறதாம். இதனால், தனது பட ரிலீஸை ஒத்திவைக்க SK முயற்சித்தும், அதற்கு வெளியீட்டு நிறுவனமான உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மறுத்துவிட்டதாம். மேலும், அப்படத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளதாம்.
Similar News
News March 1, 2025
பழிவாங்கும் முயற்சி: சீமான்

அரசியல் ரீதியாக தன்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் வழக்கு மூலம் முடக்கி விடலாம் என நினைப்பதாக சீமான் விமர்சித்துள்ளார். காவல்துறையினர் விசாரணைக்கு பிறகு பேசிய அவர், கடந்த முறை கேட்ட கேள்விகளையே தன்னிடம் காவல்துறையினர் மீண்டும் கேட்டனர் என்றார். வழக்கு தொடர்பாக தேவைப்பட்டால் மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச்.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 1, 2025
அமெரிக்க குற்றவாளி ஆனார் பைஜூஸ் ரவீந்திரன்

இந்திய தொழில் முனைவரான பைஜூஸ் ரவீந்திரனை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்துள்ளது. அவர் தலைமையிலான பைஜூஸ் நிறுவனம், அமெரிக்காவில் 533 மில்லியன் டாலர் பணத்தை கையாடல் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருடன் கேம்ஷாப்ட் என்ற நிதி நிறுவனமும் மோசடியில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனைகளை ரவீந்திரன் மறைக்க முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.