News February 28, 2025
தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்து கடன் வாங்கியது: சு.சாமி

சமஸ்கிருதத்தில் இருந்து கடன் பெறப்பட்ட 40% சொற்கள் தமிழில் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இதற்கு நல்ல உதாரணம் துர்கா ஸ்டாலினும், கருணாநிதி என்ற பெயர்கள்தான் என்றும், ஹிந்தியை எதிர்க்கும் திமுகவின் மனநிலையை கற்பனை செய்து பாருங்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், ஒரு தமிழனாக சமஸ்கிருத ஹிந்தியை கற்க விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2025
பணப்பரிவர்த்தனை: வாட்ஸ்அப் விரைவில் புதிய வசதி

கூகுள் பே, போன் பே போன்று வாட்ஸ்அப் சமூகவலைதளமும் பணப்பரிவர்த்தனை வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், குறைந்த அளவு பணப்பரிவர்த்தனைக்காக வாட்ஸ்அப் தற்போது UPI LITE என்ற வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதை தற்போது வாட்ஸ்அப் பரிசோதித்து வருகிறது. பரிசோதனை முடிந்ததும் அது அறிமுகப்படுத்தப்படும். அது அமலுக்கு வந்தால், விரைந்து பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என கூறப்படுகிறது.
News March 1, 2025
பிரதமர் உறுதி அளிப்பாரா? CM ஸ்டாலின் கேள்வி

தொகுதி மறுசீரமைப்பால் TNன் தொகுதிகள் குறையாது என PM மோடி உறுதி அளிப்பாரா என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், மிரட்டுனா அடங்குறவங்க இல்ல நாங்க, அடக்க நினைப்பவர்களை அடங்க வைப்பவர்கள் என்றார். TNன் உரிமையை பாதுகாக்க அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்பதாக அறிவித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
News March 1, 2025
மார்ச் 26க்குள் KYC அப்டேட்.. PNB வேண்டுகோள்

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேசனல் வங்கி (PNB) டிசம்பர் 31ஆம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யும்படி வாடிக்கையாளர்களை ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது. எனினும் சிலர் இன்னமும் அதை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து KYC அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்கள், உடனே வங்கிக் கிளைகளுக்கு சென்று மார்ச் 26க்குள் செய்யும்படி PNB வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.