News February 28, 2025

Headphone போட்டால் ஆபத்து: அரசு

image

Earphones, Headphones, Earbuds ஆகியவற்றை நாளொன்றுக்கு 2 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இப்படி பயன்படுத்துவது, செவியின் கேட்கும் திறனை குறைத்து, நிரந்தர காது கேளாமையை உண்டாக்கக்கூடும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகநேரம் ஹெட்ஃபோன் பயன்படுத்தும் உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 1, 2025

மெகுல் சோக்சிக்கு ரத்த புற்றுநோய்?

image

PNB வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில் தேடப்படும் தொழிலதிபர் மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் தலைமறைவாக உள்ளார். விசாரணைக்கு ஆஜராகும்படி, அவரை மும்பை விசாரணை நீதிமன்றம் கோரியிருந்தது. இந்நிலையில், ரத்த புற்றுநோய் இருப்பதாகவும், இதற்கு ரேடியேஷன் தெரபி சிகிச்சை எடுப்பதால் இந்தியா வர முடியாது. ஆகஸ்ட் வரை தன்னால் பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

News March 1, 2025

பணப்பரிவர்த்தனை: வாட்ஸ்அப் விரைவில் புதிய வசதி

image

கூகுள் பே, போன் பே போன்று வாட்ஸ்அப் சமூகவலைதளமும் பணப்பரிவர்த்தனை வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், குறைந்த அளவு பணப்பரிவர்த்தனைக்காக வாட்ஸ்அப் தற்போது UPI LITE என்ற வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதை தற்போது வாட்ஸ்அப் பரிசோதித்து வருகிறது. பரிசோதனை முடிந்ததும் அது அறிமுகப்படுத்தப்படும். அது அமலுக்கு வந்தால், விரைந்து பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என கூறப்படுகிறது.

News March 1, 2025

பிரதமர் உறுதி அளிப்பாரா? CM ஸ்டாலின் கேள்வி

image

தொகுதி மறுசீரமைப்பால் TNன் தொகுதிகள் குறையாது என PM மோடி உறுதி அளிப்பாரா என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், மிரட்டுனா அடங்குறவங்க இல்ல நாங்க, அடக்க நினைப்பவர்களை அடங்க வைப்பவர்கள் என்றார். TNன் உரிமையை பாதுகாக்க அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்பதாக அறிவித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

error: Content is protected !!