News February 28, 2025
IND உடன் மோதும் அணிகளுக்கு தான் அழுத்தம்: SA வீரர்

CTயில் IND உடன் செமி ஃபைனல், ஃபைனல் மோத உள்ள அணிகளுக்கு அதிக அழுத்தம் இருக்கும் என SA வீரர் ரஸ்ஸி வான்டெர் டூசன் தெரிவித்துள்ளார். ஒரே இடத்தில் பயிற்சி செய்து, விளையாடுவது INDக்கு மிக சாதகமான ஒன்று எனவும், இதனால் அந்த மைதானத்தை அணியால் முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதை புரிந்து கொள்வதற்கு ராக்கெட் டெக்னாலஜி அறிவு தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2025
வரும் 2ம் தேதி முதல் ரமலான் நோன்பு!

ரமலான் மாதத்திற்கான பிறை இன்று தென்படாததால், வரும் ஞாயிறு (மார்ச் 2) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக ரமலான் இருந்து வருகிறது. புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இம்மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் முழுவதும் நோன்பு இருந்து 30வது நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவார்கள்.
News February 28, 2025
சீமானிடம் போலீஸ் விசாரணை

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயலட்சுமியின் புகார் குறித்து அவரிடம் இணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் குழு விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தை சுற்றிலும் நாதக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டு வருகிறது.
News February 28, 2025
CM ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து சொன்ன அழகிரி

முதல்வர் ஸ்டாலினுக்கு, அவரது அண்ணன் மு.க.அழகிரி நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ளார். இதையொட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு பேரனுடன் வந்த மு.க.அழகிரி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 2014ல் திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, சகோதரர்கள் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது.