News February 28, 2025
EPF வட்டியில் மாற்றமில்லை

2024-25 நிதியாண்டுக்கான வருங்கால வைப்புநிதி (EPFO) வட்டி விகிதம் மாற்றமின்றி 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டு 8.15 சதவீதமாக இருந்த EPFO வட்டி, கடந்த ஆண்டு 0.10% உயர்த்தப்பட்டது. 2015-16ஆம் ஆண்டு 8.8 சதவீதமாக இருந்த EPFO வட்டி படிப்படியாக குறைந்து, தற்போது இந்நிலைக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 7 கோடி பயனர்கள் இந்த EPFO திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர்.
Similar News
News February 28, 2025
பரோட்டா சாப்பிட்டு சிறுவன் பலி?

சென்னை, திருமுல்லைவாயலில் பரோட்டா சாப்பிட்ட சிறுவன் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவன் சுதர்சன் கடந்த திங்களன்று காலையில் பரோட்டா சாப்பிட்டதாகவும், அதிலிருந்து அவனுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து நேற்று சிறுவன் உயிரிழந்தான். இந்த மரணத்துக்கு பரோட்டா சாப்பிட்டதா (அ) வேறு காரணமா என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 28, 2025
பரோட்டா சாப்பிடுவதால் மரணம் ஏற்படுமா?

பரோட்டாவால் மரணம் ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், பரோட்டாவால் வயிறு உப்புதல், மலச்சிக்கல், வாயுப் பிரச்னை, நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்னைகள் ஏற்படலாம். இதில் மாவுச்சத்து அதிகம் என்பதால் கலோரியும் அதிகம். பரோட்டாவை அவசரமாக உண்ணுவதாலும், அதிகம் வாயில் திணிப்பதாலும் மூச்சுத்திணறி சிலர் இறந்துள்ளனர். ஆகவே, மெதுவாக, மென்று ருசித்து சாப்பிடுவது நல்லது.
News February 28, 2025
AUS-AFG போட்டி நிறுத்தம்! அரையிறுதியில் ஆஸி.,

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று, ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. லாகூர் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளன. இதனிடையே, குரூப் B பிரிவில் முதல் அணியாக ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது.