News February 28, 2025

காவல்துறை சம்மன்.. நேரம் குறித்த சீமான்

image

நடிகையின் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராவதாக சீமான் தெரிவித்துள்ளார். தருமபுரியில் பேசிய அவர், வீட்டில் ஆட்கள் இல்லாதது போல் சம்மனை சுவற்றில் ஒட்டியது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். சீமானின் இந்த பேட்டியைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு வளசரவாக்கத்தில் திரள நாம் தமிழர் பலரும் சோஷியல் மீடியாவில் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

Similar News

News February 28, 2025

சர்ச்சை கருத்து: மயிலாடுதுறை கலெக்டர் மாற்றம்

image

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி, <<15609948>>சிறுமி தவறாலேயே<<>> அந்த சம்பவம் நடந்ததாகக் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, அவரை மாற்றி, அப்பதவியில் ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்தை தமிழக அரசு நியமித்துள்ளது.

News February 28, 2025

விஸ்கி, பீர் மிக்சிங் செய்து குடித்தால் என்ன நடக்கும்?

image

சிலருக்கு விஸ்கி குடிக்கும் பழக்கமும், சிலருக்கு பீர் குடிக்கும் பழக்கமும் இருக்கும். இந்த இரண்டும் வெவ்வேறு ஆல்கஹால் என்பதால் இரண்டையும் ஒன்றாக கலந்து குடிப்பது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வாந்தி, பேதி மற்றும் தூக்கமின்மையை அது உண்டாக்கும். அதேபோல், உடல்நலனில் மேலும் பல எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். ஆதலால் விஸ்கி, பீர் இரண்டையும் கலந்து குடிப்பதை தவிர்ப்பதே நல்லது.

News February 28, 2025

பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை

image

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1இல் தொடங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, மாநிலம் முழுவதும் நாளை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

error: Content is protected !!