News February 28, 2025

இன்னும் மே மாதமே வரல… அதுக்குள்ள பொளக்கும் வெயில்!

image

நாட்டின் பல இடங்களிலும் இப்போதே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. கடந்த செவ்வாய், டெல்லியில் 32.4 °C, மும்பையில் 38.7 °C வெயில் கொளுத்தியுள்ளது. அந்நகரங்களில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெயில் இதுவே. சென்னையில் 29.05 °C அடித்துள்ளது. நாட்டில் குளிர்காலம் குறைந்து சம்மர் சீசன் நீளும் காலநிலை மாற்றத்தையே இது குறிப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள். இப்பவே இப்படினா மே மாசம் எப்படி இருக்க போகிறதோ?

Similar News

News February 28, 2025

விஸ்கி, பீர் மிக்சிங் செய்து குடித்தால் என்ன நடக்கும்?

image

சிலருக்கு விஸ்கி குடிக்கும் பழக்கமும், சிலருக்கு பீர் குடிக்கும் பழக்கமும் இருக்கும். இந்த இரண்டும் வெவ்வேறு ஆல்கஹால் என்பதால் இரண்டையும் ஒன்றாக கலந்து குடிப்பது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வாந்தி, பேதி மற்றும் தூக்கமின்மையை அது உண்டாக்கும். அதேபோல், உடல்நலனில் மேலும் பல எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். ஆதலால் விஸ்கி, பீர் இரண்டையும் கலந்து குடிப்பதை தவிர்ப்பதே நல்லது.

News February 28, 2025

பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை

image

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1இல் தொடங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, மாநிலம் முழுவதும் நாளை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

News February 28, 2025

கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பட்லர்

image

இங்கிலாந்து ODI மற்றும் T20 தொடர்களில் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். T20, ODI தொடர்களில் AUS மற்றும் AFG அணிகளிடம் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்ததால், பட்லரின் கேப்டன்சி விமர்சிக்கப்பட்டது. SAக்கு எதிராக நாளை நடக்க உள்ள போட்டியே, கேப்டனாக அவரது கடைசி போட்டியாகும்.

error: Content is protected !!