News February 28, 2025
பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

பாஜகவின் அடுத்த தலைவர் மார்ச் 15க்குள் அறிவிக்கப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே 12 மாநிலங்களில் அக்கட்சியில் அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் 6 மாநிலத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தப்பின் தேசிய தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய தலைவர் நட்டாவின் பதவிகாலம் கடந்த ஜூன் 2024ல் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 28, 2025
மல்யுத்த வீரர் ஒசாமு நிஷிமுரா காலமானார்

ஜப்பானைச் சேர்ந்த புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஒசாமு நிஷிமுரா (53) காலமானார். கடந்த ஓராண்டாக உணவுக்குழாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது, 4வது ஸ்டேஜில் தான் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவர் கடந்த டிசம்பர் மாதம் வரை மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வந்துள்ளார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News February 28, 2025
WPL: டெல்லி அணிக்கு 124 ரன்கள் இலக்கு

மகளிர் பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரில், டெல்லி அணிக்கு 124 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி. பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் முதலில் களமிறங்கிய MIW அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹெய்லி மேத்யூஸ் 22, ஹர்மன்பிரீத் 22, அமெலியா 17 ரன்கள் எடுத்தனர். DCW தரப்பில், ஜொனாசென், மின்னு மணி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
News February 28, 2025
மயிலாடுதுறை கலெக்டருக்கு அண்ணாமலை கண்டனம்

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் மீது தவறு இருப்பதாக பேசிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. அந்தவகையில், முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கலெக்டர் பேசியுள்ளதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் பழிபோட்டு, தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணம் என்று சாடினார்.