News March 30, 2024

எங்கள் அமைதிக்கு காரணம் முதல்வர்

image

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் பிரதமர் இங்கு வந்துபோக முடிகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளாா். தயாநிதி மாறனை ஆதரித்து பேசிய அவர், “பிரதமர் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளதால் தான், அண்ணாமலையால் தமிழ்நாட்டில் தொடர்ந்து அவதூறாக பேச முடிகிறது. முதல்வர் எங்களை அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறார், அதனால் பொறுமையாக இருக்கிறோம்” எனக் கூறினார்.

Similar News

News January 17, 2026

மெளனியாக இருப்பது ஏன்? விஜய்க்கு அதிர்ச்சி!

image

பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி CBI விசாரணையிலிருந்து பாதியில் திரும்பிய விஜய், பொங்கல் விழாக்களில் பங்கேற்காதது சர்ச்சையாக மாறியுள்ளது. குறிப்பாக கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற விஜய், பொங்கலுக்கு மட்டும் ஏன் X பதிவில் ஒரு வாழ்த்துடன் முடித்து கொண்டார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன் ஜன நாயகன் பட சென்சார் விவகாரத்தில் கூட அவர் மௌனியாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுந்துள்ளது.

News January 17, 2026

₹3 லட்சம் மெஷினுடன் வந்த சுப்மன் கில்: குடிநீர் பீதியா?

image

இந்தியா-நியூசிலாந்து தொடரின் இறுதிப்போட்டி இந்தூரில் நடக்கவுள்ளது. இந்நிலையில், கேப்டன் சுப்மன் கில், ₹3 லட்சம் மதிப்புள்ள அதிநவீன வாட்டர் பியூரிஃபையரை தனது ஹோட்டல் அறைக்கே கொண்டு வந்துள்ளாராம். பாட்டில் நீரையே மீண்டும் சுத்திகரித்து குடிக்கிறாராம். இது, இந்தூரில் குடிநீர் மாசு பிரச்னையால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கையா அல்லது அவரது தனிப்பட்ட பாதுகாப்பு நடைமுறையா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

News January 17, 2026

அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு..

image

TN-ல் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் ரேஷன் பொருள்களை பெற்று வருகின்றனர். இந்த மாதம் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி, பொங்கல் விடுமுறையால், மாத ரேஷன் பொருள்கள் வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. குடியரசு தினத்தை ஒட்டியும் 2 நாள்கள் விடுமுறை வருகிறது. எனவே, பிப்ரவரியில், ஜனவரி மாத பொருளையும் சேர்த்து வழங்க மக்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், அரசு இதை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!