News February 28, 2025

இராசிபுரம் மாணவன் கைது

image

ராசிபுரம் அரசு பள்ளியில் படித்து வந்த 9ம் வகுப்பு மாணவர் கவின்ராஜ் புதன்கிழமை பள்ளி வளாகத்தில் கழிவறையில் சக மாணவரால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார். இதனையடுத்து அதே பள்ளியை சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டு காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். தகராறு நடந்ததையும் அவரை தாக்கியதையும் மாணவர் ஒப்புக்கொண்டார். இதனிடையே பள்ளியில் கல்வித்துறை இணை இயக்குனர் முருகன் நேரில் விசாரணை நடத்தினார்.

Similar News

News September 6, 2025

நாமக்கல்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

image

நாமக்கல் மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)

News September 6, 2025

நாமக்கல்: ஊக்க தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி

image

நாமக்கலில் ஊக்க தொகை ரூ.10,000 பணத்துடன் கூடிய ஓராண்டு கால இலவச அர்ச்சகர் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியானது நரசிம்ம சுவாமி கோயிலில் நடத்தப்படும் வைணவ ஆகமம் குறித்து இருக்கும். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள், கோயில் செயல் அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News September 6, 2025

வட்டார வளர்ச்சி அலுவலர் திடீர் மாயம் போலீசார் விசாரணை

image

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி பிரிவு) பிரபாகரன் நேற்று இரவு பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு தனது காரில் நாமக்கல் நோக்கி சென்றவர் வீட்டிற்கு செல்லாத நிலையில் மாயமானார். இதனை அடுத்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் யசோதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!