News February 28, 2025

இந்தியா வளர கருத்து சொன்ன டீச்சர் சஸ்பெண்ட்

image

தோனிக்கு பின் தமிழகத்தில் பிரபலமாகப் போகும் 2வது பிஹார்காரன் நானாக தான் இருக்கமுடியும் என தவெக ஆண்டுவிழாவில் பிரசாந்த் கிஷோர் பெருமையாகப் பேசியிருந்தார். ஆனால், அங்கு பணி ஒதுக்கப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை தீபாலி, பிஹாரை இந்தியாவில் இருந்து நீக்கிவிட்டால் வளர்ந்த நாடாகிவிடும் எனப் பேசி அந்த பெருமையை சுக்குநூறாக்கி விட்டார். விளைவு வேலையில் இருந்து சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.

Similar News

News February 28, 2025

பங்குச்சந்தைகள் சரிவுக்கு என்ன காரணம்?

image

பங்குச்சந்தைகள் சரிவுக்கு ரூபாய் மதிப்பு சரிவு முக்கிய காரணமாகும். மேலும், வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது, அமெரிக்காவில் நுகர்வில் மந்தநிலை வரலாம் என்ற கணிப்பு, டிரம்ப் விதித்துள்ள இறக்குமதி வரி உயர்வு, small, midcaps நிறுவனங்களின் சரியும் valuations ஆகியவை முக்கிய காரணங்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனாலும், மார்ச்சில் பங்குச்சந்தைகள் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கையையும் தெரிவிக்கின்றனர்.

News February 28, 2025

திட்டமிட்டு அசிங்கப்படுத்த முயற்சி.. சீமான் குற்றச்சாட்டு

image

திட்டமிட்டு தன்னை அசிங்கப்படுத்த முயற்சி நடப்பதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், பிறருக்கு உதவுவது போல்தான் விஜயலட்சுமிக்கும் உதவியதாக தெரிவித்தார். விசாரணைக்கு வருவதாக காவல்துறையிடம் தாம் தெரிவித்ததாகவும், இதற்கு இரவு 8 மணிக்கு வர போலீசார் சொன்னதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் போலீஸ் இப்படி நடக்க மாட்டார்கள் எனவும் கூறினார்.

News February 28, 2025

எச்சில் துப்புறதும் பாலியல் தொல்லையும் ஒன்னா!

image

பாலியல் தொல்லைக்கு ஆளான 3 வயது சிறுமி, சிறுவன் மீது எச்சில் துப்பியதால்தான் பாலியல் தொல்லை நடந்தது என மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அருகே சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமிக்கு 16 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில், இரண்டு பக்கமும் தவறு உள்ளது என ஆட்சியரே பேசியிருப்பது கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

error: Content is protected !!