News February 28, 2025
தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அரசு விழாவா?

திருவள்ளூரில், நேற்று (பிப்.27) திமுக அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில், தமிழ்தாய் வாழ்த்துப் பாடாமல் நிகழ்ச்சியைத் தொடங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. MRK பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் எம்.எல்.ஏ., ஆட்சியர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
திருவள்ளூரில் வாடகை வீட்டில் ஹவுஸ் ஓனர் பிரச்சனையா?

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 என்ற எண்ணில் புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க.
News March 10, 2026
சித்தம்பாக்கம் ஏரியில் மண் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு!

திருவள்ளூர்: சித்தம்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஏரி சுற்றுவட்டாரத்தில் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டால் நீர்நிலைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், விவசாயம் மற்றும் குடிநீர் வளம் குறையும் என்றும் கூறி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
News March 10, 2026
திருவள்ளூரில் வேண்டிய வரம் அருளும் அம்மன்!

திருவள்ளூர், பெரியபாளையத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க


