News February 28, 2025
10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.
Similar News
News February 28, 2025
11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று IMD கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை மறுநாள் தென்தமிழகம், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
News February 28, 2025
ஜனநாயகன் VS பராசக்தி: சினிமாவிலும் அரசியல்?

‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ படங்கள் 2026 பொங்கலில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கடைசி படம் பொங்கலுக்கு வெளியானால், அது அடுத்து நடைபெறும் தேர்தலுக்கு பயன்படும் என விஜய் தரப்பு நம்புகிறதாம். இதனால், தனது பட ரிலீஸை ஒத்திவைக்க SK முயற்சித்தும், அதற்கு வெளியீட்டு நிறுவனமான உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மறுத்துவிட்டதாம். மேலும், அப்படத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளதாம்.
News February 28, 2025
பொதுத்தேர்வில் கிரிக்கெட் கேள்வி

பத்தாம் வகுப்பு CBSE (இந்தி) பொதுதேர்வில் மாணவர்களுக்கு கிரிக்கெட் குறித்து கேட்கப்பட்ட கேள்வி கவனத்தை ஈர்த்துள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. அதுகுறித்து, விரிவாக கட்டுரை எழுதச்சொல்லி பொதுத்தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் பார்க்காத மாணவர்கள் எப்படி எழுதுவார்கள் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.