News February 28, 2025
இரவில் நிம்மதியான தூக்கத்திற்கு..

நமது உடலில் சுரக்கும் மெலடோனின் என்ற ஹார்மோன்தான் நம்மை தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்த ஹார்மோன், இருட்டிய பின்னர்தான் சுரக்கத் தொடங்கும். அப்போது நாம் செல்ஃபோன் பார்த்துக் கொண்டு இருந்தால் இந்த ஹார்மோன் சுரக்காது. இதனால்தான், அத்தகைய வேளைகளில் நமக்கு தூக்கம் வருவதில்லை. எனவே தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்ஃபோன் பார்ப்பதை நிறுத்திவிட்டால், நிம்மதியாக தூங்கலாம்.
Similar News
News February 28, 2025
நியூஸி.க்கு எதிராக ரோஹித் களமிறங்குவது சந்தேகம்?

CT தொடரில், IND vs NZ மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இந்நிலையில், இப்போட்டிக்கான பயிற்சியில் ரோஹித் பங்கேற்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்சில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், நியூசி.க்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்குவது சந்தேகம் எனப்படுகிறது. ரோஹித் இல்லனா யாரு டீம் கேப்டன்?
News February 28, 2025
பிரபல நடிகர் உத்தம் மொகந்தி காலமானார்

பிரபல பாலிவுட் நடிகர் உத்தம் மொகந்தி (66) உடல்நலக்குறைவால் நேற்று இரவு டெல்லியில் காலமானார். ஒடிசாவை பூர்விகமாகக் கொண்ட இவர், 1977இல் ‘அபிமான்’ படம் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். ஒடியா, இந்தி, பெங்கால் ஆகிய மொழிகளில் 130 படங்களில் நடித்துள்ளார். மாநில அரசின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள உத்தம் மொகந்தியின் மறைவுக்கு ஒடிசா CM மோகன் சரண் மாஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News February 28, 2025
இந்தியா வளர கருத்து சொன்ன டீச்சர் சஸ்பெண்ட்

தோனிக்கு பின் தமிழகத்தில் பிரபலமாகப் போகும் 2வது பிஹார்காரன் நானாக தான் இருக்கமுடியும் என தவெக ஆண்டுவிழாவில் பிரசாந்த் கிஷோர் பெருமையாகப் பேசியிருந்தார். ஆனால், அங்கு பணி ஒதுக்கப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை தீபாலி, பிஹாரை இந்தியாவில் இருந்து நீக்கிவிட்டால் வளர்ந்த நாடாகிவிடும் எனப் பேசி அந்த பெருமையை சுக்குநூறாக்கி விட்டார். விளைவு வேலையில் இருந்து சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.