News February 27, 2025
தமிழ்ல எழுதிட்டா அது தமிழ் ஆயிடுமா?

முன்பெல்லாம் ரயில்களுக்கு ‘வைகை exp’, ’பாண்டியன் exp’ என்று பெயரிடுவார்கள். இப்போது பாருங்கள். அந்த்யோதயா, சதாப்தி என்று இந்திப் பெயர்கள்தான் வைக்கப்படுகின்றன. அதேபோல, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ‘ஜன் அவுஷாதி’ என்று ஏதோ புரியாத மொழியிலேயே வருகின்றன. அதேபோல, இந்திப் பெயர்களை தமிழ் எழுத்துக்களால் எழுதினால் அது தமிழாகிவிடுமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
சூடு சொரணை இல்லாத காங்கிரஸார்: விஜயதரணி

காங்கிரஸில் இன்று 99% பேர் திமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்வதாக விஜயதரணி தெரிவித்துள்ளார். சூடு சொரணை இல்லாத 1% பேர்தான் திமுக அரசிடம் சில பல சலுகைகளை அனுபவித்துக்கொண்டு அங்கு இருக்க வேண்டும் என சொல்கிறார்கள் என சாடியுள்ளார். 23 வருடமாக தன் இளமை காலத்தையெல்லாம் காங்கிரஸில் செலவு செய்ததாகவும், மக்கள் பணி செய்ய நினைத்தபோது இடையூறு தந்ததால் அக்கட்சியில் இருந்து வெளியேறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
News March 4, 2026
திமுக காங்கிரஸ் இழுபறி இன்று முடிவுக்கு வருமா?

திமுக காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பெரும் இழுபறியில் உள்ளது. மற்றொரு பக்கம் தவெக தரப்பிலும் காங்கிரஸ் பேசி வருவதாக செய்தி வெளியானதால் அக்கட்சி நிர்வாகிகளே குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் திமுக – காங்., பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக தரப்பில் அதிகபட்சமாக 29 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 4, 2026
வங்கிக் கணக்கில் பணம்.. உடனே செக் பண்ணுங்க

PM KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 விரைவில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் பயனாளிகளின் விவரங்கள் மாறியிருந்தால் அடுத்த தவணையை பெற முடியாது. எனவே, உங்கள் விவசாய அடையாள அட்டையில் எண்ணில் உள்ள ஆதார் எண், புதிய வங்கிக் கணக்கு, மாற்றப்பட்ட முகவரி என ஏதேனும் மாறியிருக்கிறதா என செக் செய்யவும். மாற்றமிருப்பின், வேளாண் அலுவலகத்திற்குச் சென்று மாற்றிக் கொள்ளுங்கள்.


