News February 27, 2025
UPI மூலம் PF பணம். வந்தது ஒப்புதல்

PF பணத்தை GPay, PhonePe மாதிரியான UPI அப்ளிகேஷன்கள் மூலம் எடுப்பதற்கு CBT எனப்படும் அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து, பணிகளைத் தொடங்கியுள்ள NPCI, ஏப்ரல் இறுதியில் இத்திட்டம் அமலுக்கு வரும் என்று உறுதியளித்துள்ளது. அதேபோல, PF பணத்தை ATM மூலம் எடுக்கும் வசதியையும் அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
Similar News
News March 13, 2026
BREAKING: திமுகவில் அதிரடி மாற்றம்.. இதுவே முதல்முறை

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜீவ் காந்தி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இந்நிலையில், மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். அந்த பதவியில் ஜெ.வீரமணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாணவரணியின் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. மேலும், ராஜீவ்காந்தி கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
News March 13, 2026
பங்குச் சந்தையில் ₹23.44 லட்சம் கோடி சரிவு

மேற்காசிய போர் தொடங்கியதிலிருந்து BSE Sensex 5,252 புள்ளிகள் (6.46%) சரிந்துள்ளதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி முதல் BSE-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த மதிப்பு, ₹23.4 லட்சம் கோடி சரிந்து ₹4.40 லட்சம் கோடி ஆனது. முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையாக பங்குகளை விற்று வெளியேறியதே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
News March 13, 2026
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வணிகர் சங்கம்

மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விளக்கங்கள் கொடுத்த நிலையிலும், பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 2 கோடி லிட்டர் வரை பெட்ரோல் விற்பனையாகும் நிலையில், நேற்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் 3.5 கோடி லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று பெட்ரோலிய வணிகர் சங்கம் மீண்டும் விளக்கமளித்துள்ளது.


