News March 30, 2024

அரசு பள்ளிகளுக்கு ஏப். 1 முதல் ஸ்மார்ட் போர்டு

image

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படவுள்ளன. அரசு பள்ளிகளில் தற்போது கருப்பு நிற போர்டுகள் உள்ளன. இதற்கு பதிலாக ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக ஏப். 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் போர்டு விநியோகிக்கப்படவுள்ளன. வரும் கல்வி ஆண்டில் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News October 30, 2025

அதிமுகவுக்கு இதுதான் வாடிக்கை: சேகர்பாபு

image

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, எவையெல்லாம் தமிழகத்திற்கு உகந்ததாக இல்லையோ, அதையெல்லாம் வரவேற்பதுதான் அதிமுகவின் வாடிக்கையாக உள்ளது என விமர்சித்தார். திமுகவின் திராவிட மாடல் ஆட்சியை எப்போதும் இகழும் பணியிலேயே அதிமுக, பாஜக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News October 30, 2025

திருப்பதி சால்வை கொள்முதலில் முறைகேடா?

image

திருப்பதி கோயிலுக்கு வரும் VVIP-களுக்கு சால்வை அணிவிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இந்த சால்வை கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹400 மதிப்புள்ள சால்வையை ₹1,300-க்கு வாங்கியதாக கணக்கு காட்டி, ₹50 லட்சம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக புலனாய்வு விசாரணை நடத்த, கோயில் அறங்காவலர் குழு உத்தரவிட்டுள்ளது.

News October 30, 2025

விஜய்யுடன் கூட்டணி… முடிவை அறிவித்தார்

image

கரூர் துயருக்கு பிறகு, அதிமுக, பாஜக கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், NDA-வில் விஜய் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜய்யை NDA-வில் இணைப்பது குறித்து, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் NDA கூட்டணியை விரிவுபடுத்த விரும்புவதாகவும் கூறினார். இது விஜய்யுடனான கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாகவே தெரிகிறது.

error: Content is protected !!