News March 30, 2024

அரசு பள்ளிகளுக்கு ஏப். 1 முதல் ஸ்மார்ட் போர்டு

image

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படவுள்ளன. அரசு பள்ளிகளில் தற்போது கருப்பு நிற போர்டுகள் உள்ளன. இதற்கு பதிலாக ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக ஏப். 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் போர்டு விநியோகிக்கப்படவுள்ளன. வரும் கல்வி ஆண்டில் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News January 11, 2026

வெனிசுலாவின் எண்ணெய் காசு US கட்டுப்பாட்டில் சென்றது!

image

வெனிசுலாவின் எண்ணெய் வளத்தில் இருந்து ஈட்டப்படும் வருவாய், தற்போது முழுக்க முழுக்க அமெரிக்க கட்டுப்பாட்டில் சென்றுள்ளது. எந்தவொரு நீதித்துறை நடவடிக்கைகளில் இருந்தும் அந்த நிதியை பறிமுதல் செய்ய முடியாத வகையில் முக்கிய உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெனிசுலாவின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

News January 11, 2026

அடுத்த மெகா விற்பனையை அறிவித்த நிறுவனங்கள்

image

அமேசானும், பிளிப்கார்ட்டும் அடுத்த பெரிய விற்பனைக்கு தயாராகி வருகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 16-ம் தேதி ‘Great Republic Day Sale’-ஐ தொடங்க உள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது. SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிளிப்கார்ட்டின் குடியரசு தின விற்பனை வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. டிவி, போன்கள், லேப்டாப்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

News January 11, 2026

அடுத்த 45 நாள்களுக்கு நாடு தழுவிய பிரசாரம்

image

100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி, நாடு தழுவிய 45 நாள் பிரசாரத்தை காங்., முன்னெடுத்துள்ளது. இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டமும், நாளை முதல் வரும் 29-ம் தேதி வரை கிராம பஞ்சாயத்துகளில் மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், பிப். 7 -15 வரை மாநில அளவிலும், பிப்.16 – 25 வரை பெரிய பேரணிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!