News February 27, 2025
சங்கரன்கோவில்: 10 நாட்களில் ரூ.45 ஆயிரம் வருமானம்

வட்டார வணிக வள மையம் மூலம் கடன் உதவி பெற்று சங்கரன்கோவில் மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பினாயில் சோப் ஆயில் செய்து வந்துள்ளனர். ரூ.3 லட்சம் வரை கடன் உதவி பெற்று தொழிலை விரிவு படுத்திய நிலையில், வட்டார வணிக வள மையம் ஊக்கப்படுத்தியதன் காரணமாக தற்போது நல்ல வருமானம் ஈட்டுவதாகவும், கடந்த புத்தக திருவிழாவில் 10 நாட்களில் ரூபாய் 45 ஆயிரம் வருமானம் ஈட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 6, 2026
தென்காசியில் பரபரப்பை கிளப்பும் போஸ்டர்.!

தென்காசி மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்நிலையில் தென்காசி நகர் பகுதி முழுவதும் 15 வது பொதுமக்கள் சார்பாக என குறிப்பிடபட்டு குடிநீர் தர மறுக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம் கோ பேக் உதயநிதி என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் தென்காசி பகுதியில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
News March 6, 2026
தென்காசியில் தொடரும் கொலைகளால் அச்சம்.!

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் 30 படுகொலை சம்பவங்கள் அரங்கேறி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை 5 படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இவை பெரும்பாலும் மதுபோதை, குடும்ப தகராறு காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
News March 6, 2026
தென்காசி வரும் துணை முதல்வர்.!

தென்காசி மாவட்டத்திற்கு இன்று (மார்ச்.6) வெள்ளிக்கிழமை வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கூட்டுறவுத் துறை, வங்கி ஆகிய துறைகளில் 7, 127 பயனாளிகளுக்கு ரூ.44.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் ரூ. 6.02 கோடி மதிப்பீட்டில் 32 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ. 55.93 கோடி மதிப்பீட்டில் 185 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


