News February 27, 2025
முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மாத வியாழக்கிழமை அம்மாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், முத்தங்கி சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News March 8, 2026
நாமக்கல்: பெண் பரிதாப பலி!

மோகனுார் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி செல்வம் (55). இவர் நேற்று முன்தினம் இரவு ஜங்களாபுரம் பிரிவு பகுதியில் இருந்து, சாலையை கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல் நோக்கி வந்த டூவீலர் செல்வம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்தவரை நாமக்கல் GH-ல் அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மோகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 8, 2026
நாமக்கல் மக்களுக்கு ஓர் நற்செய்தி!

நாமக்கல் வழியாக வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்த சென்னை – போடி (20601/02) ரயில் இனி வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த, ரயிலை அடிக்கடி சென்னை செல்லும் நாமக்கல் ரயில் பயணிகள் முன்பதிவு செய்து பயன்படுத்தி பயன்பெறலாம். இதை, தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தவும்.
News March 8, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


