News February 27, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக நிர்வாகிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், கலந்துகொள்ள சென்ற அதிமுகவினரை தடுத்து போலீசார் கைது செய்தனர். அப்போது ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News February 27, 2025
டாஸ்மாக் போர்டுகளில் எண்.. உறுதி செய்ய அறிவுறுத்தல்

<<15597315>>டாஸ்மாக்<<>> போர்டுகளில் எண்கள் இருப்பதை உறுதி செய்ய தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுதாெடர்பாக டாஸ்மாக் மேலாளர்களுக்கு புதிய அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போர்டுகளில் எண்கள் அழிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க முடியாமல் இருந்தனர். போர்டுகளில் எண்கள் உறுதி செய்யப்பட்டால், இனி வாடிக்கையாளர்களால் புகார் அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
News February 27, 2025
தீண்டாமையை கடைபிடிக்கும் மரங்கள்

காடுகளில் வளரும் சிலவகை மரங்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இதனை ஆங்கிலத்தில் ‘Crown Shyness’ என்று அழைக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, அருகில் இருக்கும் மரத்திற்கு கிடைக்கும் சூரிய ஒளியை மறைத்துவிடக் கூடாது என்பதற்காக மரங்கள் இந்த முறையை கடைபிடிப்பதாக சொல்லப்படுகிறது. நீங்கள் இதை நோட் பண்ணியிருக்கீங்களா?
News February 27, 2025
ரேஷன் கடைகளுக்கு மார்ச்சில் 6 நாட்கள் விடுமுறை

ரேஷன் கடைகளுக்கு மாதத்தில் முதல் 2 வாரம் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும். அதன்படி, மார்ச் மாதத்தில் முதல் 2 வார வெள்ளி, ஞாயிறு கடைகள் திறக்கப்படாது. அதேபோல், மார்ச் மாதத்தில் கூடுதலாக 2 நாள்கள் விடுமுறை வருகிறது. மார்ச் 30ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பு ஆகும். அன்றைய தினத்தில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ஆகும். மேலும், மார்ச் 31 ரம்ஜான் பண்டிகை. ஆதலால் அன்றைய தினமும் விடுமுறை.