News February 27, 2025

கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 இளைஞர்கள் கைது

image

வாலாஜாபாத் அடுத்த கருக்குப்பேட்டை பகுதியில், இரவு நேரத்தில் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணை கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ரங்கா, சதீஷ்குமார், சந்திரசேகர் ஆகிய 3 இளைஞர்கள் வழிமறித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு 3 பேரையும் இன்று (பிப்.27) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News August 25, 2025

காஞ்சிபுரம்: போனில் மூழ்கிய மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

image

காஞ்சிபுரம், சோமங்கலம் அருகே வசித்து வருபவர் சரவணன். இவரது மகன் கோகுல் அதே பகுதியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோகுல் பள்ளிக்கு செல்லாமல் போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோகுல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 25, 2025

காஞ்சிபுரத்தில் நாளை மின்தடை!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, களியாம்பூண்டி மற்றும் மாகரல் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான திருப்புலிவனம் அழிசூர் களியாம்பூண்டி, மருதம், சிலாம்பாக்கம், மானம்பதி, உத்திரமேரூர் & சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2025

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!