News February 27, 2025
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் சுற்றுப்பகுதிகளிலும் இன்று (பிப்.27) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை, கடலோர பகுதிகளின் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
Similar News
News March 22, 2026
அரசு அதிகாரி தற்கொலை: அமைச்சர் ராஜினாமா

அரசு அதிகாரியை தற்கொலைக்கு தூண்டியதாக எழுந்த புகாரில் பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் ராஜினாமா செய்துள்ளார். அமிர்தசரஸ் மாவட்ட அரசு கிடங்கு கழக மேலாளார் ககன்தீப் சிங், SM-ல் தனது சாவுக்கு காரணம் லால்ஜித் எனக் கூறிவிட்டு தற்கொலை செய்தார். அவரை ₹10 லட்சம் லஞ்சம் வாங்க அமைச்சர் வற்புறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தால் ஆம் ஆத்மி அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.
News March 22, 2026
புதுவையில் தனித்து போட்டியிடுகிறதா திமுக?

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், திமுக – காங்., கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது. நேற்று மாலை வரை காத்திருந்தும் திமுகவை <<19446097>>காங்.,<<>> பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இந்நிலையில், இதுதொடர்பாக இன்று CM ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் புதுவையில் தனித்து போட்டியிடலாமா என்றும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 22, 2026
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் CPM

திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு CPM தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் நடந்த CPM மாநில குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தொகுதி எண்ணிக்கை விவகாரத்தில் விட்டுக் கொடுக்கப்போவதில்லை என்பதிலும் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், CPM-ஐ இதுவரை திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.


