News February 27, 2025

13 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்; வாலிபர் கைது

image

சென்னை மீஞ்சூரை சேர்ந்தவர் பாபு மகன் ராஜி(25). கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வானூர் அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கி கூலி செய்தார். கடந்த மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் பெற்றோரை ஏமாற்றி சிறுமியை கட்டாய திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராஜி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர்.

Similar News

News August 18, 2025

விழுப்புரம்: MBA முடித்தவர்களுக்கு ரூ.93,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, வரும் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 18, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் மின் தடை!

image

விழுப்புரம் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆக.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரணை பெரிச்சனூர், கண்டமங்கலம் துணை மின் நிலையம், கஞ்சனூர் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் டேங்கில் நீர் நிரப்புவது, சாதனங்களை சார்ஜ் செய்து கொள்வது உள்ளிட்ட அடிப்படைகளை இன்றே நிவர்த்தி செய்துவிடுங்கள். ஷேர் பண்ணுங்க!

News August 18, 2025

அடையாளம் தெரியாத இறந்த நபர் கண்டுபிடிப்பு

image

ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாதிரி கிராமத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி கழுத்தை நெறிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடைக்கப்பெற்ற ஆண் பிரேதம் சம்மந்தமாக, கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அன்றைய தினமே கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தேனி மாவட்டம் எரதிமக்காள்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜோதிமணி என்பது தெரிய வந்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!