News February 27, 2025
ஒழுங்கீனமாக செயல்பட்டால் 14 வகை தண்டனை

பொதுத்தேர்வில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு, 14 வகை தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வு ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள், பிட் வைத்திருந்தாலோ (அ) விடைத்தாள் பறிமாற்றத்தில் ஈடுபட்டாலோ, தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உங்கள் திறமையை நம்பி நன்றாக தேர்வை எழுதுங்கள்..
Similar News
News February 27, 2025
அமித் ஷாவுக்கு ராமதாஸ் அட்வைஸ்

எம்.பி. தொகுதிகளின் மறுவரையறை குறித்த அமித் ஷாவின் விளக்கத்தை ஏற்க முடியாது என ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தென் மாநிலங்களில் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் எல்லோர் மத்தயிலும் நிலவுகிறது. மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் தகவல்களை வெளியிடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். தொகுதிகளின் எண்ணிக்கையில் 7.20% தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News February 27, 2025
ஒற்றுமைக்கான மாபெரும் யாகம்: PM மோடி நெகிழ்ச்சி

பிரயாக்ராஜில் நடந்த மிகப் பெரிய திருவிழாவான கும்பமேளா நேற்றுடன் முடிந்துள்ளது. இதனை ஒற்றுமைக்கான மாபெரும் யாகம் சிறப்பாக நிறைவடைந்திருப்பதாக பிரதமர் மோடி தனது X பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் நடந்த ஒற்றுமைக்கான மகா கும்பமேளா 140 கோடி மக்களின் நம்பிக்கை. 45 நாட்களில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரயாக்ராஜில் புனித நீராடியது மிகப் பெரிய விஷயம் எனவும் புகழ்ந்துள்ளார்.
News February 27, 2025
வந்தாச்சு Perplexity… இனி Paytm பண்ணு…!

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், முறைகேடுகளில் இருந்து தப்பிக்க நம்பகமான தகவல்கள் தேவைப்படுகிறது. நிதி மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்களில் உடனடி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. இதற்காக உலகின் முதல் AI ஆன Perplexityயுடன் கூட்டு சேர்ந்துள்ளது Paytm. உள்ளூர் மொழிகளில் இந்த ஏஐ கலக்கும் என்பதால் நிதி சார்ந்த சந்தேகங்களுக்கு இனி ஈஸியாக விடை காணலாம்.