News February 27, 2025
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 715 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

பாகலூர் அடுத்த கூசனப்பள்ளியை சேர்ந்தவர் ராஜூ (44). பெட்டிக்கடை நடத்தி வைத்துள்ளார். இந்நிலையில் ராஜூ வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக பாகலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். வீட்டின் பின்புறம் 715 கிலோ அளவிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் ரூ.3 கோடியாகும்.தலைமறைவான ராஜூவை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News August 16, 2025
கிருஷ்ணகிரி: EPFO நிறுவனத்தில் ரூ.45,000 சம்பளத்தில் வேலை

கிருஷ்ணகிரி: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் <
News August 16, 2025
விநாயகர் சதுர்த்தி விழா; ஆட்சியர் ஆலோசனை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வருவாய் அலுவலரக்கள், சார் ஆட்சியர், நேர்முக உதவியாளர் மற்றும் பிற துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
News August 16, 2025
கிருஷ்ணகிரி: செல்போன் தொலைஞ்சிடுச்சா… கவலை வேண்டாம்

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <