News February 27, 2025
கேதார்நாத் கோயில் மே 2இல் திறப்பு

உத்தரகண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் மினி சார்தாம் என அழைக்கப்படுகின்றன. இமயமலையில் அமைந்துள்ள இந்த கோயில்கள் குளிர்காலத்தில் மூடப்பட்டு கோடையில் திறக்கப்படும். இந்த ஆண்டு கேதார்நாத் கோயில் நடை மே 2ஆம் தேதி காலை 7 மணிக்கு திறக்கப்படுகிறது. பத்ரிநாத் கோயில் மே 4 அன்றும், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில் அக்ஷய திருதியை நாளான ஏப்.30 அன்றும் திறக்கப்படுகிறது.
Similar News
News March 7, 2026
TN-ஐ காப்பாற்ற இறைவனால் தான் முடியும்: நயினார்

கஞ்சா போதை பழக்கத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டை காப்பாற்ற இறைவனால்தான் முடியும் என்பதால் திருநள்ளாற்றில் சாமி தரிசனம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இன்று சனிப்பெயர்ச்சி நடப்பது போல், தமிழகத்தில் திமுக ஆட்சியும் அகல வேண்டும் என்றும் இந்து மதத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் எதிரான ஆட்சி இது எனவும் சாடியுள்ளார்.
News March 7, 2026
சங்கீதாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: தமிழிசை

சங்கீதா மட்டுமல்ல, அந்த இடத்தில் எந்தப் பெண் இருந்தாலும் அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தமிழிசை கூறியுள்ளார். இது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் தலையிட தான் விரும்பவில்லை என்ற அவர், சங்கீதா கூறுவதை போல விஜய்யால் அவர் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் அது தவறு எனவும் பேசியுள்ளார். மேலும், இதுபோல பெண்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதே தன்னுடைய கவலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை கல்லூரி <<19320282>>மாணவி பாலியல்<<>> வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட மாணவிக்கு ₹7 லட்சம் இழப்பீடு தர அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பருக்கு ₹2 லட்சம் இழப்பீடு வழங்கவும் ஆணையிட்டுள்ளது. 4 மாதங்களுக்குள் வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதை மக்கள் வரவேற்றுள்ளனர்.


