News February 27, 2025
பிரசாந்த் கிஷோரை பாராட்டிய சீமான்

கெட் அவுட் என்று கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோரை தான் பாராட்டுவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அவரது மொழியை கெட் அவுட் என்று சொல்ல அவருக்கு மனதில்லை, அதுபோல நம் மொழியை விட்டுக்கொடுக்க நமக்கு மனமில்லை எனவும் தெரிவித்தார். இந்த சண்டை தவிர்க்க முடியாத போர் என்றும், இதில் வென்று மொழியை காக்கும் வரையிலும் சண்டை தொடரும் எனவும் குறிப்பிட்டார்.
Similar News
News February 27, 2025
கிராமத்து இயக்குநருடன் கைகோர்த்த SaNa

‘வம்சம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ படங்களை இயக்கிய பாண்டியராஜ், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாண்டியராஜ் பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா, டி.இமான் ஆகிய இசையமைப்பாளர்களுடனே பணியாற்றி வந்த நிலையில், தற்போது முதல்முறையாக சந்தோஷ் நாராயணனுடன் கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
News February 27, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹320 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.27) சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹8,010க்கும், சவரன் ₹64,080க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹106க்கும், 1 கிலோ ₹1,06,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் நேற்று சவரனுக்கு ₹200 குறைந்திருந்த நிலையில், 2வது நாளாக சரிவடைந்திருப்பது நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
News February 27, 2025
தமிழகத்தில் எண்ணெய்: மத்திய அரசின் அடுத்த திட்டம்

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிக்கு மத்திய அரசு டெண்டர் விடுத்துள்ளது. இதனால் கடல் பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படும் என சமூக செயல்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு என்றாலே பிரச்னையை உருவாக்க மத்திய அரசு திட்டம் போடுகிறதா? இல்லை அதன் திட்டங்கள் பிரச்னையை உருவாக்குகிறதா? உங்கள் கருத்து என்ன?