News February 27, 2025
CT தொடரில் இருந்து வெளியேறியது இங்கிலாந்து

நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து மூன்றாவது அணியாக இங்கிலாந்து வெளியேறியுள்ளது. ஏற்கெனவே குரூப் ஏ-வில் இருந்து வங்கதேசமும் பாகிஸ்தானும் வெளியேறியுள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியா & ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த இங்கிலாந்து, லீக் போட்டிகளிலேயே வெளியேறியுள்ளது. இதுவரை, இந்தியா & நியூசிலாந்து அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
Similar News
News February 27, 2025
பக்தியின் மகாகும்பமேளா: அமித்ஷா புகழாரம்

ஈஷா மகாசிவராத்திரி விழா பக்தியின் மகாகும்பமேளா போன்று நடைபெறுவதாக அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார். ஈஷா மகாசிவராத்திரி விழாவில் பேசிய அவர், சத்குரு ஒரு லட்சியத்தோடு இயங்கிக்கொண்டுள்ள ஞானி என்றார். உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் முதலில் உங்களை மாற்ற வேண்டும் என்பதை சத்குரு உணர்த்தி வருவதாகவும், இந்த விழாவில் தமிழில் பேச முடியாததற்கு வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.
News February 27, 2025
குறைந்த போட்டியில் 50 விக்கெட்டை வீழ்த்திய ஆர்ச்சர்

ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஜோப்ரா ஆர்ச்சர் (30 போட்டிகள்) முதலிடத்தை பிடித்துள்ளார். நேற்றைய ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் – 31 , ஸ்டீவ் ஹார்மிசன் – 32 ,ஸ்டீவன் பின் – 33, டேரன் காப் – 34 போட்டிகளில் 50 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
News February 27, 2025
பிரசாந்த் கிஷோரை பாராட்டிய சீமான்

கெட் அவுட் என்று கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோரை தான் பாராட்டுவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அவரது மொழியை கெட் அவுட் என்று சொல்ல அவருக்கு மனதில்லை, அதுபோல நம் மொழியை விட்டுக்கொடுக்க நமக்கு மனமில்லை எனவும் தெரிவித்தார். இந்த சண்டை தவிர்க்க முடியாத போர் என்றும், இதில் வென்று மொழியை காக்கும் வரையிலும் சண்டை தொடரும் எனவும் குறிப்பிட்டார்.