News February 27, 2025

‘பெயர் சொல்லும் பிள்ளைகள் நீங்கள் தானே..’

image

உ.பி.யில் சண்டை ஒன்றில் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு, அனில் கவுர் என்பவர் சிறையில் தவித்துள்ளார். தந்தையை காப்பாற்ற முடிவெடுத்த அவரின் பிள்ளைகள் ரிஷப், உபசனா இருவருமே சட்டம் பயின்று வக்கீலாக வழக்கில் ஆஜராகினர். அவர்களின் விடாமுயற்சி காரணமாக 11 ஆண்டுகள் கழித்து, அனில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாசத்திற்காக சட்டத்துடன் மோதி, அப்பாவைக் காப்பாற்றிய இவர்கள்தான் ‘உண்மையில் பெயர் சொல்லும் பிள்ளை ’!

Similar News

News February 27, 2025

சாம்பியன்ஸ் டிராபி: PAK Vs BAN இன்று மோதல்

image

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் – வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதனால் தொடரில் இருந்து பாகிஸ்தான், வங்காளதேசம் வெளியேறிய நிலையில், தங்களது கடைசி லீக் போட்டியில் இன்று களம் காண்கின்றன. இரு அணிகளும் தங்களது முதல் வெற்றிக்காக போராடும்.

News February 27, 2025

விஜயலட்சுமி புகார்: சீமான் நேரில் ஆஜராக மாட்டார்?

image

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராக அவருக்கு நேற்று முன்தினம் சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

News February 27, 2025

பக்தியின் மகாகும்பமேளா: அமித்ஷா புகழாரம்

image

ஈஷா மகாசிவராத்திரி விழா பக்தியின் மகாகும்பமேளா போன்று நடைபெறுவதாக அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார். ஈஷா மகாசிவராத்திரி விழாவில் பேசிய அவர், சத்குரு ஒரு லட்சியத்தோடு இயங்கிக்கொண்டுள்ள ஞானி என்றார். உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் முதலில் உங்களை மாற்ற வேண்டும் என்பதை சத்குரு உணர்த்தி வருவதாகவும், இந்த விழாவில் தமிழில் பேச முடியாததற்கு வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.

error: Content is protected !!