News February 26, 2025
மோர்ஸ் கோட் என்றால் என்ன?

IPL தொடருக்காக சென்னை வந்திருக்கும் <<15588615>>தோனியின் டி-சர்ட்டில் உள்ள மோர்ஸ் கோட்<<>> பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அப்படியென்றால் என்ன? தொலைதூரத்திற்கு தகவல்களை அனுப்புவதற்கான எளிமையான முறைதான் Morse Code. இதனை 1830ஆம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்பவர் கண்டுபிடித்தார். A முதல் Z வரை உள்ள எழுத்துகளுக்கு ‘.’ & ‘_’ மூலம் அடையாளம் கொடுக்கப்பட்டு, அவை எலக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றப்படும்.
Similar News
News February 27, 2025
மகா கும்பமேளா: மம்தா பானர்ஜி சந்தேகம்

144 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவ்வாண்டு மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறதா என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மகா கும்பமேளா 2025இல் கொண்டாடுவதன் துல்லியத் தன்மை குறித்து நிபுணர்கள் சரிபார்க்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 2013இல் கும்பமேளா நடைபெற்ற நிலையில் தற்போது மகா கும்பமேளா நடத்தப்படுவது சரியானதா என்றும் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 191
▶குறள்:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
▶பொருள்: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.
News February 27, 2025
செல்வப்பெருந்தகை மீதான புகார் குறித்து கார்த்தி கருத்து

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான புகார் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இதை தான் பெரிய விஷயமாக நினைக்கவில்லை என்றும், கடந்து செல்லவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் 15க்கும் மேற்பட்டவர்கள் செல்வப்பெருந்தகை மீது பிரியங்கா காந்தியிடம் புகார் கூறியிருந்தனர்.