News March 30, 2024

‘பாரத ரத்னா’ விருது வழங்குகிறார் முர்மு

image

இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் வழங்க உள்ளார். இந்த ஆண்டு 5 பேருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இதில், பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Similar News

News January 21, 2026

இணையதளங்களின் வர்த்தகத்தை பாதிக்கும் AI

image

கூகுள் தேடல் மூலம் இணையதளங்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதாம். தற்போது, தேடல் தொடர்பான தகவல்கள், AI உதவியுடன் சுருக்கமாக வருகிறது. இதனால், பயனர்கள் இணையதளங்கள் உள்ளே செல்வதற்கான தேவை குறைகிறது. இந்நிலையில், Google Search Traffic அடுத்த 3 ஆண்டுகளில் 40% குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறைவதால் இணையதளங்களின் வர்த்தகம் பாதிப்படையும்.

News January 21, 2026

வீடுவீடாக போய் உள்ளாடை திருட்டு: இளைஞர் கைது

image

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில், பெண்களின் உள்ளாடைகளை குறிவைத்து திருடிவந்த 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். வீடுகளில் காயப்போடப்பட்டிருந்த உள்ளாடைகளை திருடுபோவதாக புகாரளிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் CCTV வைத்து ஆய்வு செய்து சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், திருடுபோன உள்ளாடைகள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

News January 21, 2026

ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்

image

*நட்பின் ஆழம் பழக்கத்தின் அளவைப் பொறுத்தது அல்ல. *விடியற்காலை இன்னும் இருட்டாக இருக்கும்போதும் ஒளியை உணரும் பறவைதான் நம்பிக்கை. *முள் எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே அதை எடுக்க முடியும். *காதல் ஒரு முடிவற்ற மர்மம், ஏனெனில் அதை விளக்கக்கூடிய நியாயமான காரணம் எதுவும் இல்லை. *அளவுக்கு மீறிய ஆசைகளை கைவிடுவதே ஆகச்சிறந்த செல்வமாகும்.

error: Content is protected !!