News February 26, 2025
அமெரிக்காவின் கதாநாயகன் காலமானார்

USA அதிபராக இருந்த ஜான் எப்.கென்னடி 1963இல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் மனைவி, உளவுத்துறை அதிகாரியாக இருந்த கில்லால் காப்பாற்றப்பட்டார். கென்னடியை காப்பாற்ற முயன்றபோது கில், துப்பாக்கித் தோட்டா பாய்ந்து காயமடைந்தார். அவரது இந்த துணிச்சலால், அமெரிக்க மக்களால் கதாநாயகனாக பார்க்கப்பட்டார். இந்நிலையில், கலிபோர்னியாவில் வசித்து வந்த ஹில் (93) காலமானதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 26, 2025
‘L2: எம்புரான்’ போஸ்டர் வெளியீடு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லாலின் ‘L2: எம்புரான்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் 2ஆம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உட்பட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் ஸ்டீபன் நெடும்பள்ளி குறித்த கதை வெளியான நிலையில், 2வது பாகம் குரேஷி அபிராம் குறித்த கதையாக அமைந்துள்ளது.
News February 26, 2025
தமிழக மக்களை ஏமாற்ற முடியாது: திருமா

விஜய் தேர்தலை சந்தித்தால்தான் அவரை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தெரியவரும் என திருமாவளவன் கூறியுள்ளார். பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும், அவர்களால் பெரியளவில் சாதிக்க முடிவதில்லை என குறிப்பிட்ட அவர், சினிமா புகழை வைத்து எல்லாவற்றையும் ஓரங்கட்டி விட முடியாது என்றார். தமிழக மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருப்பதாகவும், அவர்களை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.
News February 26, 2025
சிவராத்திரி: இன்று இரவு இதை செய்தால் குபேரன் ஆகலாம்

*சிவ லிங்கத்திற்கு ருத்ர அபிஷேகத்துடன் தயிர், கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் செல்வ வளம் பெருகும் * தேன் மற்றும் நெய்யால் அபிஷேகம் செய்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் *சிவலிங்கத்திற்கு தண்ணீரில் தேன் கலந்த அபிஷேகம் செய்தால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும் *வில்வம், சந்தனம் படைத்து வழிபட்டாலோ, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தாலோ ஆசைகள், விருப்பங்கள் அனைத்தும் உடனே நிறைவேறும்.