News March 30, 2024

சந்திரசேகர் ராவ் மகன் மீது வழக்குப்பதிவு

image

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் ராமாராவ் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. ஹனுமகோண்டா காவல்நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அளித்த புகாரில், கட்டுமான அதிபர்களிடம் முதல்வர் ரேவந்த் ரெட்டி, ரூ.2,000 கோடி வசூலித்து டெல்லிக்கு அனுப்பி இருப்பதாக ராமாராவ் பொய் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News October 29, 2025

Spam Call-களுக்கு செக் வைக்க TRAI முடிவு

image

Spam Call-களை கட்டுப்படுத்த TRAI முக்கிய முடிவை எடுத்துள்ளது. இனி உங்களுக்கு போன் செய்பவர்களின் உண்மையான பெயர்கள், மொபைல் டிஸ்பிளேயில் தெரியவரும். இதற்கான முன்மொழிவிற்கு TRAI ஒப்புதல் அளித்துள்ளது. ஒருவர் சிம் கார்டு வாங்கும் போது கொடுத்த ஆவணங்களில் இருந்து இந்த ‘Calling Name Presentation’ செயல்படுத்தப்பட உள்ளது. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில், Truecaller போன்ற 3-ம் நிலை செயலிகள் தேவைப்படாது.

News October 29, 2025

ரஷ்மிகாவுக்கு இருக்கும் உச்சபட்ச ஆசை இதுதான்

image

மற்ற துறைகளை போல சினிமாவிலும் 8 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாக ரஷ்மிகா தெரிவித்துள்ளார். சினிமாவில் உள்ள அனைவருக்கும் குடும்பமும் தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறது என கூறிய அவர், குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், அதிகமாக வேலை செய்து ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டு விட்டேனே என பிற்காலத்தில் கவலைப்பட விரும்பவில்லை எனவும் பேசியுள்ளார்.

News October 29, 2025

மழை வெளுக்கப் போகுது.. 14 மாவட்டங்களில் உஷார்!

image

தமிழகத்தின் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றிரவு 10 மணி வரை கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், குமரி, தென்காசி, தேனி, நெல்லை, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், சிவகங்கை, திருவள்ளூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே!

error: Content is protected !!