News February 26, 2025
தவெகவில் இணைந்தார் நடிகை ரஞ்சனா நாச்சியார்

நேற்று பாஜகவிலிருந்து விலகிய நடிகையும், மாநில கலை, பண்பாட்டுப் பிரிவு செயலாளருமான ரஞ்சனா நாச்சியார் தவெகவில் இணைந்தார். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தவெகவின் 2ஆம் ஆண்டு விழா அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைக்கும் எனவும், விஜய் தமிழக மக்களுக்கு நல்லது செய்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News February 26, 2025
மகா சிவராத்திரி: கண் விழித்தே ஆக வேண்டிய ராசிகள்

சிவபெருமானுக்கு கொண்டாடப்படக் கூடிய முக்கியமான விழாக்களில் மகா சிவராத்திரி முதன்மையானதாகும். அனைத்து ராசிக்காரர்களும் இந்நாளில் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். குறிப்பாக, சனியின் பார்வையில் வரக்கூடிய ராசிகள் இந்நாளில் விழித்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதன்படி, மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், ஜென்ம சனிக்குள் நுழையப்போகும் மீன ராசிக்காரர்கள் கட்டாயம் விழிக்க வேண்டும்.
News February 26, 2025
மோர்ஸ் கோட் என்றால் என்ன?

IPL தொடருக்காக சென்னை வந்திருக்கும் <<15588615>>தோனியின் டி-சர்ட்டில் உள்ள மோர்ஸ் கோட்<<>> பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அப்படியென்றால் என்ன? தொலைதூரத்திற்கு தகவல்களை அனுப்புவதற்கான எளிமையான முறைதான் Morse Code. இதனை 1830ஆம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்பவர் கண்டுபிடித்தார். A முதல் Z வரை உள்ள எழுத்துகளுக்கு ‘.’ & ‘_’ மூலம் அடையாளம் கொடுக்கப்பட்டு, அவை எலக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றப்படும்.
News February 26, 2025
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: NOC கிடைத்தது

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. இதையடுத்து, மைதானத்திற்கான வடிவமைப்பை ஒரு வாரத்தில் இறுதி செய்ய தமிழக விளையாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. ஒண்டிப்புதூர் பகுதியில் 20.72 ஏக்கரில் மைதானம் அமைய உள்ளது. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குறுதியில் CM ஸ்டாலின் அறிவித்திருந்தார்.