News February 26, 2025

காரில் கஞ்சா கடத்தியதில் ஒடிசா வாலிபர் கைது

image

ஓசூர் அடுத்து பாகலூர் அருகே கக்கனூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் போலீசார் இருந்தனர். அப்போது அங்கு வந்தகார் ஒன்றை சோதனை செய்தபோது, அதில் 15கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதை விசாரித்த போலீசார் ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த ஜோசோபந்தா மொகாந்தி 24 வயது கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கார், செல்போன் மற்றும் 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News

News August 16, 2025

கிருஷ்ணகிரி: EPFO நிறுவனத்தில் ரூ.45,000 சம்பளத்தில் வேலை

image

கிருஷ்ணகிரி: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News August 16, 2025

விநாயகர் சதுர்த்தி விழா; ஆட்சியர் ஆலோசனை

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வருவாய் அலுவலரக்கள், சார் ஆட்சியர், நேர்முக உதவியாளர் மற்றும் பிற துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News August 16, 2025

கிருஷ்ணகிரி: செல்போன் தொலைஞ்சிடுச்சா… கவலை வேண்டாம்

image

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!