News February 26, 2025
தருமபுரி வெடி விபத்து; ஒருவர் கைது

நேற்று முன்தினம் பூமிசமுத்திரத்தில் பட்டாசு குடோன் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கிருபாகரன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பட்டாசு குடோன் உரிமையாளர் சின்னதுரையை கம்பைநல்லூர் காவலர்கள் நேற்று பிப்ரவரி 25 மாலை கைது செய்தனர். மேலும் பொதுமக்கள் நலன் கருதி இந்த பட்டாசு ஆலை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 17, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.16) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தோப்பூரில் ஜீலான்பாஷா , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 16, 2025
தருமபுரி: டாஸ்மாக் கடையில் மயங்கி உயிரிழப்பு!

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேருந்து நிலையம் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே ஒலபட்டி பகுதியை சேர்ந்த மாதையன் (65), மதுபோதையில் மயங்கி கிடந்தவரை பொதுமக்கள் புகாரில். கம்பைநல்லூர் போலிஸார் நேற்று மீட்டு, தருமபுரி GH-க்கு கொண்டு சென்றதில், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 16, 2025
தருமபுரி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

தருமபுரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <


