News February 26, 2025

அடையாளம் தெரியாத மூதாட்டி சடலமாக மீட்பு

image

சமயபுரத்தில் இருந்து ஆதி மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் நரசிங்கமங்கலம் வேப்பமரம் மண்டா பிடியில் படுத்திருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 4, 2026

திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா?.. APPLY

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News March 4, 2026

திருச்சி: விவசாயிகளுக்கான புதிய செயலி அறிமுகம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,83,115 விவசாயிகளில் 1,33,300 பேர் மட்டுமே பிரதமரின் தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனர். இன்னும் 49,815 பேர் அடையாள எண் பெறாமல் உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு விவசாயிகள் பதிவை துரிதப்படுத்தும் வகையில் FARMER REGISTRY TN என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் விவசாயிகள் தங்களது சிட்டா விவரங்களை தாமாகவே பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News March 4, 2026

திருச்சி: பாலியல் வன்கொடுமை வழக்கு – நீதிமன்றம் அதிரடி

image

துறையூர், ஜம்புநாதபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (32) என்பவர் முட்புதருக்குள் கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இவ்வழக்கில் பெருமாள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாளி பெருமாளுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6000 அபராதம் விதித்து நீதிபதி சண்முகப்பிரியா தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!